நாயை கட்டிவைத்து அடித்து கொன்ற கொடூரம் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

Maharashtra Crime Murder
By Vidhya Senthil Oct 25, 2024 10:35 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

புனேவில் நாயை மரத்தில் தொங்கவிட்டு தாய் - மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புனே

இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் விபத்துகளுக்கும் அதிகரித்து வருகிறது . அதே வேளையில், விலங்களுக்கும் அடிப்பது, துன்புறுத்துவது போன்ற தொடர் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் புனேவில் இது போன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

dogs

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள முல்ஷி பகுதியில் பிரபாவதி ஜக்தாப் மற்றும் அவரது மகன் ஓம்கார் ஜக்தாப் வசித்து வருகின்றனர். இவர்கள் நாய் ஒன்றைச் செல்லப் பிராணியாகக் கடந்த 8 ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளனர்.

அலுவலகத்தில் இருந்து வந்த மெயில் - நொடியில் இளைஞர் எடுத்த வீபரித முடிவு!

அலுவலகத்தில் இருந்து வந்த மெயில் - நொடியில் இளைஞர் எடுத்த வீபரித முடிவு!

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 22 அன்று தங்களின் செல்லப் பிராணியான லாப்ரடரை குச்சியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அவரது மகன் ஓம்கார், நாயை மரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நாய் கொலை

இதனையடுத்து சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் எழுப்பினார். அதே நேரத்தில் நாய்களுக்கான தங்குமிடத்தை நடத்தும் மிஷன் பாசிபிள் அறக்கட்டளையை நடத்தும் விலங்கு ஆர்வலரான பத்மினி ஸ்டம்ப், நாயைக் கொன்றதாகத் தாய் மற்றும் மகன் மீது புனே கிராமப்புற காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

dog muder in pune

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெறி நாய்க்கடி உள்ளிட்ட சில பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர். செல்லப்பிராணிக்கு ரேபிஸ் இருப்பதாகக் கருதி, அவர்கள் அதைக் கொன்றிருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.