காங்கிரஸ் தலைவரை கொன்ற கொலை கும்பல் - அதிகாலையில் உலுக்கிய கொடூர சம்பவம்!

Andhra Pradesh Crime Murder
By Vidhya Senthil Oct 22, 2024 10:52 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 முன்விரோதம் காரணமாகக் காங்கிரஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்

தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஜபிதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரு கங்காரெட்டி (56) . இவர் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை மரு கங்காரெட்டி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் அவர் கீழே விழுந்தார்.

cong leader murder

அப்போது காரில் இருந்த ஒருவர் இறங்கி அவரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.இந்த சம்பவத்தில் மரு கங்காரெட்டி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இந்த சுழலில் அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கணவரின் நீண்ட ஆயுளுக்கு காலையில் விரதம் - மாலை விஷம் வைத்த மனைவி

கணவரின் நீண்ட ஆயுளுக்கு காலையில் விரதம் - மாலை விஷம் வைத்த மனைவி

உடனடியாக இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை கங்கா ரெட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு ஜக்டியாலில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 கொலை

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் எம்.எல்.சி. ஜீவன் ரெட்டியின் நெருங்கிய கூட்டாளி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

telangana

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் மரு கங்காரெட்டிக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்கு நடந்து இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டதால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.