60 வயது முதியவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த பெண் - பகீர் பின்னணி!

Sexual harassment Bengaluru
By Sumathi Aug 16, 2023 04:32 AM GMT
Report

முதியவரை, பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை 

கர்நாடகா, பெங்களூருவை சேர்ந்தவர் 60 வயது முதியவர். அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் போலீஸில் என்னுடைய அந்தரங்க போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவோம் என்று

60 வயது முதியவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த பெண் - பகீர் பின்னணி! | Woman Raped 60 Years Old Man Bengaluru

மிரட்டி இரண்டு பெண்கள், 82 லட்ச ரூபாயை பறித்து கொண்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரிக்கையில்,

மிரட்டிய பெண்கள்

இவருக்கு அவரது நண்பர் மூலமாக அன்னம்மா(40) என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறி 5,000 ரூபாய் உதவியாக வாங்கியுள்ளார்.

அதன்பின் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இநிந்லையில், அவரை எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஓயோ ஹோட்டலுக்கு, அன்னம்மா அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அவரை நிர்வாணமாக வீடியோவும், போட்டோக்களையும் எடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய தோழி சினேகா என்பவரும் சேர்ந்து வீடியோவை வைத்து மிரட்டி முதியவரிடம் பணம் பெற்றுள்ளனர்.

இதனால் பயந்த அவர், 2 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 82 லட்ச ரூபாயை அனுப்பி வைத்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அதனையடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.