ஆணாக மாற ஆசைப்படுறேன்; பெண் காவலர் அறுவை சிகிச்சை - அரசு அனுமதி!
பெண் காவலரின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை
மத்திய பிரதேசம், ரத்லம் மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் தீபிகா கோத்தாரி. பெண்ணாக பிறந்து வளர்ந்த இவர் ஆணாக தன்னை உணர ஆரம்பித்துள்ளார்.
இதனால் பல சிக்கல்களையும் மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக ஆணாக மாறுவதற்கான ஏற்பாடுகளில் இறங்க முடிவு செய்துள்ளார்.
அரசு அனுமதி
இவர் அரசு ஊழியர் என்பதால், தான் மேற்கொள்ளவிருக்கும் அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான தேவை ஆகியவற்றை விளக்கி, கடந்தாண்டு மாநில அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்த மாநில உள்துறை அதற்கு அனுமதி வழங்கி தற்போது உத்தரவிட்டுள்ளது. எனினும் பெண் ஊழியர்களுக்கான பிரத்யேக சலுகைகள் ஏதும் இனி தீபிகாவுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.