10 பேரை மணந்த பெண்; மாதம் 1 மாப்பிள்ளை - 11வது திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி

Kerala Marriage Crime
By Sumathi Jun 10, 2025 07:14 AM GMT
Report

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாண ராணி 

கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர், திருமண வரன் தேடி வந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

ரேஷ்மா

அதில் தனது மகள் ரேஷ்மாவுக்கு வரன் பார்த்து வருகிறோம் என்றும், அவளுக்கு உங்களை பிடித்துள்ளதாகவும் பென் ஒருவர் கூறியுள்ளார். பின் ரேஷ்மா அவரை மாலில் சந்தித்து பேசியுள்ளார். தொடர்ந்து இருவரும் செல்போனில் உறவை வளர்த்த நிலையில், திடீரென திருமணத்துக்கு தனது தாயார் மறுப்பு தெரிவிப்பதாக ரேஷ்மா கூறியுள்ளார்.

இதனால் எதிர்ப்பை மீறி பஞ்சாயத்து உறுப்பினர் ரேஷ்மாவை திருமணம் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி மணப்பெண்ணை அலங்காரம் செய்து காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரேஷ்மா வைத்திருந்த பேக் அவரின் கையில் சிக்கியுள்ளது. அதில் ரேஷ்மாவுக்கு 45 நாட்களுக்கு முன்பு வேறொரு ஆணுடன் திருமணம் நடைபெற்றதான் மேரேஜ் சர்டிபிகேட் இருந்துள்ளது.

ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் - பகீர் திருப்பம்

ஹனிமூன் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற புதுப்பெண் - பகீர் திருப்பம்

 

சிக்கிய பெண் 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போலீஸில் புகாரளித்துள்ளார். உடனே மண்டபம் விரைந்த போலீஸார் ரேஷ்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ரேஷ்மாவுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. மேட்ரிமோனியில் வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளார்.

10 பேரை மணந்த பெண்; மாதம் 1 மாப்பிள்ளை - 11வது திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி | Woman Marrying 10 Young Men Kerala

திருமணம் முடிந்த கையுடன் மணமகளின் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுபோன்று, இதுவரை 10 பேரை ஏமாற்றியுள்ளார். அதில், 7 பேருடன் முறையாக திருமணம் செய்து, அதற்கு உரிய சான்றிதழையும் வைத்துள்ளார்.

அடுத்த மாததே 12 ஆவதாக வோறொரு ஆணுடன் திருமணம் செய்ய திட்டமிருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.