என் 2 கிட்னிய திருடுன டாக்டரோட கிட்னி எனக்கு வேணும் - கதறிய பெண்!
சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் இரண்டு கிட்னிகளும் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென் சிகிச்சை
பீகார், முசாஃபர்பூர் நகரைச் சேர்ந்தவர் சுனிதா(38). இவருக்கு கடுமையான ஏற்பட்டிருக்கிறது. அதனால், அருகில் இருந்த ஆர்.கே.சிங் என்ற மருத்துவருக்குச் சொந்தமான தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு கர்ப்பப்பை தொற்று இருப்பதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். அதன் பிறகும் சுனிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
2 கிட்னி மாயம்
அங்கு பரிசோதித்ததில் அவரின் 2 சிறுநீரகங்களும் காணவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதன்பின் அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்திற்கு மாற்றப்பட்டார். மேலும், இதுகுறித்து சுனிதா புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் அந்த மருத்துவர் தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா, ``என்னுடைய இரண்டு கிட்னிகளையும் திருடிய மருத்துவரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரின் கிட்னி, மாற்று அறுவை சிகிச்சைக்காக எனக்கு வேண்டும்.
ஏனென்றால் எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் உயிர் பிழைக்க வேண்டும். மேலும், இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், பணத்துக்காக ஏழைகளின் உயிருடன் விளையாடும் பேராசை பிடித்த மருத்துவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.