தகாத உறவு: உன்னை விட நான் ரொம்பவே அழகு அப்புறம் எப்படி - ஆத்திரத்தில் ஆசிட் அடித்த பெண்!

Maharashtra Crime
By Sumathi Dec 06, 2022 11:16 AM GMT
Report

கள்ளக்காதலன் மனைவியின் முகத்தில் பெண் ஆசிட் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

நாக்பூர், யசோதா நகர் பகுதியை சேர்ந்தவர் புரங்கி வர்மா. இவருக்கு லதா(24) என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளது. இதனிடையே, இவருக்கு அதேபகுதியை சேர்ந்த ஜியா(25) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

தகாத உறவு: உன்னை விட நான் ரொம்பவே அழகு அப்புறம் எப்படி - ஆத்திரத்தில் ஆசிட் அடித்த பெண்! | Woman Held For Throwing Acid On Lovers Wife

இது குறித்து அறிந்த லதா தனது கணவரின் கள்ளக்காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாததின்போது உன்னை விட நான் மிகவும் அழகாக இருக்கும்போது என் கணவர் ஏன் உன் மீது காதலில் விழுந்தார் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதலி வெறிச்செயல் 

இதனால் ஆத்திரமடைந்த ஜியா தனது தோழியுடன் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி லதாவிடம் போனில் அடையாளம் தெரியாத நபர் போல் பேசி உங்கள் கணவரின் கள்ளத்தொடர்பு குறித்து சில ரகசியங்களை கூற வேண்டும் அதற்காக குண்டலால் குப்தா நகருக்கு வரும் படி கூறியுள்ளார்.

தொடர்ந்து லதாவும், 2 வயது மகனை தோளில் சுமந்துகொண்டு அங்குச் சென்றுள்ளார். அப்போது, லதாவை இடைமறித்த புர்கா அணிந்த ஜியா தான் வைத்திருந்த ஆசிட்டை அவரின் முகத்தில் வீசிவிட்டு பைக்கில் தப்பிச்சென்றார்.

அதனையடுத்து அலறிய லதாவையும், மகனையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் கணவனின் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.