மக்களே கவனம்.. தாகத்திற்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் - பறிப்போன பெண்ணின் உயிர்!

United States of America Death Water
By Sumathi Aug 05, 2023 05:49 AM GMT
Report

பெண் ஒருவர் அதிகமாக தண்ணீர் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அளவுக்கு அதிகம்

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆஷ்லே சம்மர்(35). இவர் குடும்பத்துடன் இந்தியானா மாகாணத்தில் உள்ள லேக் ப்ரீமேன் என்ற பகுதியில் சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தியுள்ளார்.

மக்களே கவனம்.. தாகத்திற்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் - பறிப்போன பெண்ணின் உயிர்! | Woman Dies From Drinking Too Much Water America

அதிலும் 20 நிமிடங்களுக்குள் ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தியதாக தெரிகிறது. தொடர்ந்து, வீட்டுக்கு திரும்பியதில் தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண் பலி

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹைப்போநெட்ரேமியா(hyponatremia) என்ற சோடியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். உடலில் சோடியம் குறைவாக இருக்கும் போது அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பையே ஹைப்போநெட்ரேமியா என்கின்றனர்.

மக்களே கவனம்.. தாகத்திற்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் - பறிப்போன பெண்ணின் உயிர்! | Woman Dies From Drinking Too Much Water America

சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, இதுகுறித்து விளக்கமளித்த மருத்துவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தண்ணீருடன் எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும்

மினரல்ஸ் நிறைந்த பானத்தையும் அருந்த வேண்டும். இதனால், உடலில் ஏற்படும் உப்பு மற்றும் மினரல்ஸ் குறைபாடு சீராகும் என்றும், அது தண்ணீருடன் கலந்து, உடலில் உள்ள நீர் வெளியேற உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.