சேலை வாங்கி தராத கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு - கதறும் பிள்ளைகள்!

Crime Jharkhand Murder
By Vidhya Senthil Oct 13, 2024 01:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

கணவர் புதிய சேலை வாங்கி தராததால் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் 

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள பாக்ஜோபா கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தோ தேவி (26 வயது). இவரது கணவர் டிராக்டர் ஓட்டுநராக உள்ளார்.

jharkhand

இந்த தம்பதிகளுக்குத் திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் தசரா பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பள்ளியின் புகழுக்காக நரபலி - 2ஆம் வகுப்பு மாணவனை கொன்ற பள்ளி நிர்வாகம்

பள்ளியின் புகழுக்காக நரபலி - 2ஆம் வகுப்பு மாணவனை கொன்ற பள்ளி நிர்வாகம்

அந்த வகையில் தசராவின் இறுதி நாளான நேற்று செந்தோ தேவி, தன்னுடைய கணவரிடம் புதிய சேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரால் சேலை வாங்கி தர முடியவில்லை.

 தற்கொலை

இதனால் மனமுடைந்த செந்தோ தேவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

murder

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கணவர் புதிய சேலை வாங்கி தராததால் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.