திருமணமான 6 மாதத்தில்.. இளம்பெண் விபரீத முடிவு - என்ன நடந்தது?

Marriage Kanyakumari Death
By Sumathi Jul 05, 2025 08:45 AM GMT
Report

திருமணமான 6 மாதத்தில், இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

கன்னியாகுமரி, கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா(26). பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணமான 6 மாதத்தில்.. இளம்பெண் விபரீத முடிவு - என்ன நடந்தது? | Woman Commit Suicide 6 Month Of Marriage Kumari

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இருவரும் உறுதியாக இருந்ததால், இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

ரிதன்யா இறப்பு திட்டமிட்ட கொலை; பரபரப்பை கிளப்பிய சீமான் - ஏன்?

ரிதன்யா இறப்பு திட்டமிட்ட கொலை; பரபரப்பை கிளப்பிய சீமான் - ஏன்?

பெண் தற்கொலை

தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர். அதில்தான் இருவரும் வசித்து வந்துள்ளனர். நிதின் பிஇ படித்திருந்த நிலையில் வெளிநாடு செல்வதாக கூறிவந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

திருமணமான 6 மாதத்தில்.. இளம்பெண் விபரீத முடிவு - என்ன நடந்தது? | Woman Commit Suicide 6 Month Of Marriage Kumari

இந்நிலையில் ஜெமலா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும், அவருடைய உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ஜெமலா தாய் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும், சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.