நாக்கை கடித்த இளம்பெண்; உடனே கோமாவுக்கு சென்ற பயங்கரம் - ஷாக் பின்னணி!
நாக்கை கடித்துக்கொண்ட இளம் பெண் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோமாவில் இளம்பெண்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் கெய்ட்லின் அஸ்லோப்(27). இவர் தன்னுடைய தோழிகளுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக நாக்கை கடித்துள்ளார்.
தொடர்ந்து, அதன்பின் வெவ்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளார். இறுதியாக மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்பட்ட சூழலில், உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவரை அனுகியதில்,
ஷாக் சம்பவம்
கடிபட்டதால் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சில மாத்திரைகளை பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் எதுவும் சரிவராத நிலையில், இதுகுறித்து பேசிய அவர்
“என்னுடைய சருமம் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் மாறிவிட்டது. தோல் உறிந்து கொட்ட தொடங்கியது. என் நாக்கு கருப்பு நிறமாக மாறிவிட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தபோது உடல் உறுப்புகளை வெட்டி அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கெய்ட்லினுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை தக்க வைப்பது, மூச்சுப் பாதையை சீரமைப்பது, உறுப்புகளின் செயலிழப்பை தடுப்பது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள அவரை கட்டாய கோமா நிலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சிகிச்சைக்குப்பின் அவர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.