தோழியை மணக்க ஆணாக மாறிய பெண் அரசு ஊழியர் - கடைசியில் வேறொருவரை மணந்த தோழி!

Uttar Pradesh
By Sumathi Jan 26, 2023 10:21 AM GMT
Report

தோழியை மணக்க விரும்பிய அரசு பெண் ஊழியர் ஒருவர், பாலின அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

தன்பாலின ஈர்ப்பு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சோனல். இந்தப் பெண்ணின் வீட்டு மேல்தளத்தில் வாடகைக்கு குடியிருந்தவர், குஜராத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியரான சனா. இருவரிடையே நட்பு உண்டாகி, நாளடைவில் நெருங்கிய தோழிகளாயினர்.

தோழியை மணக்க ஆணாக மாறிய பெண் அரசு ஊழியர் - கடைசியில் வேறொருவரை மணந்த தோழி! | Woman Changes Sex For Lover

இருவருக்கும் இடையே பாலியல் ரீதியான உறவு இருப்பதாகச் சந்தேகப்பட்ட சோனலின் பெற்றோர், சனாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். அதன்பின், சனாவுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பு கிடைத்தது. அவரோடு வாழ சோனல் முடிவு செய்தார். தொடர்ந்து, சனாவுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

பாலின அறுவை சிகிச்சை

அதன் பின்னர், சனா தனது பெயரை அதிகாரபூர்வமாக சோஹைல்கான் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் கணவன்- மனைவியாக இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். சோனல் மருத்துவமணை ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். மேலும் அவர் போக்கில் இருப்பதாக சனா சண்டையிட்டுள்ளார்.

அதன்பின் மருத்துவமனையில் உள்ள கியான் என்பவரை சோனல் காதலித்து வந்தது தெரிய வந்தது. சனாவைப் பிரிந்து கியானுடன் சென்று போலீஸில் புகாரளித்துள்ளார். இந்நிலையில், சனா நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் சோனலை காவல்துறையினர் கைது செய்து ஜாமீனில் விடப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை பிரவரி 23ல் நடைபெற உள்ளது.