காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண் - உல்லாசத்திற்கு பின் நடந்த விபரீதம்!

Gujarat Relationship Death
By Vidhya Senthil Oct 01, 2024 12:05 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

உடலுறவின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி ஓட்டலில் கடந்த 23-ம் தேதி இளம்பெண் ஒருவர்  அறை எடுத்து தனது காதலனுடன் உல்லாசமாக இருந்த போது உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை நடத்திய தீவிர விசாரணை நடத்தினர்.

sex

முதற்கட்ட விசாரணையில், உடலுறவின்போது பெண்ணுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியிருக்கிறது. ஆனால், அவரது காதலனோ, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முயற்சி செய்யாமல், இணையத்தில் வழிமுறைகளைத் தேடி நேரம் கடத்தியிருக்கிறார்.

5 மாத பெண் குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம் - தாய் வெறிச்செயல்!

5 மாத பெண் குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம் - தாய் வெறிச்செயல்!

ஒரு கட்டத்தில் ரத்தப்போக்கு அதிகமாகி அந்த பெண் மயங்கியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலன், தனது நண்பர் ஒருவரை ஓட்டலுக்கு வரவழைத்து அவர் உதவியுடன் இளம் பெண்ணை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

 உடலுறவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து,மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

murder

பரிசோதனையின் முடிவில் , உடலுறவுக்குப் பிறகு அதிக ரத்தம் வெளியேறியதால் அவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காதலன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது அக்டோபர் 4-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.