இப்போ எதுக்கு இங்க வந்தீங்க; எம்எல்ஏ கன்னத்தில் பளார் விட்ட மூதாட்டி - பரபரப்பு வீடியோ!
மழை வெள்ளத்தை பார்வையிட வந்த எம்.எல்.ஏ.வை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளப் பாதிப்பு
ஹரியானா மாநிலம் முழுவதும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7 மாவட்டங்கள் தத்தளித்து வருகிறது. இந்த வெள்ளப் பாதிப்பை முதல்வர் மனோகர் லால் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பொருள்கள் வழங்கி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். அதனையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஜனநாயக் ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஈஸ்வர் சிங், குஹ்லா சென்றிருந்தார்.
பரபரப்பு சம்பவம்
அப்போது, அவருடன் பெண்கள் கழிவு நீர் சாக்கடை தூர்வாரப்படாமல் மோசமாக இருந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர், இவ்வளவு நாளும் வராமல் இப்போது ஏன் வந்தீர்கள்?’ என்று எம்.எல்.ஏ.வை அடித்துவிட்டார்.
#WATCH | Haryana: In a viral video, a flood victim can be seen slapping JJP (Jannayak Janta Party) MLA Ishwar Singh in Guhla as he visited the flood affected areas
— ANI (@ANI) July 12, 2023
"Why have you come now?", asks the flood victim pic.twitter.com/NVQmdjYFb0
உடனே, பாதுகாப்பு கொடுக்க வந்தவர்கள் பத்திரமாக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அடித்த பெண் மீது எந்த வித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றும், மன்னித்துவிட்டதாகவும் ஈஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.