காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்; டி.வி ஆங்கரை கடத்தி டார்ச்சர் - பெண் தொழிலதிபர் கைது!

India Telangana Marriage Hyderabad
By Jiyath Feb 25, 2024 10:10 AM GMT
Report

காதலிக்க மறுத்த டி.வி தொகுப்பாளரை பெண் தொழிலதிபர் ஒருவர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் தொல்லை 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா. இவர் திருமண பதிவு இணையதளத்தில் பிரணவ் சிஸ்ட்லா என்ற டி.வி. தொகுப்பாளரின் புகைப்படத்தை பார்த்துள்ளார்.

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்; டி.வி ஆங்கரை கடத்தி டார்ச்சர் - பெண் தொழிலதிபர் கைது! | Woman Abducts Tv Anchor In Hyderabad

பின்னர் அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டும் பேசி வந்துள்ளார். ஆனால் சிறிது நாட்கள் கழித்து அவர் டி.வி. தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா இல்லை என்பதும், அவரின் புகைப்படத்தை வைத்து சைதன்யா ரெட்டி என்பவர் தன்னை ஏமாற்றி வந்துள்ளார் என்பது திரிஷ்னாவுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் பிரணவ் சிஸ்ட்லாவை தொடர்பு கொண்ட திரிஷ்னா நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை - 4 பேர் கைது!

சென்னையில் பயங்கரம்! காதல் திருணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை - 4 பேர் கைது!

தொகுப்பாளர் கடத்தல் 

அதோடு நிற்காமல் பிரணவ் சிஸ்ட்லாவிற்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் திரிஷ்னாவின் நம்பரை பிரணவ் பிளாக் செய்துள்ளார்.

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்; டி.வி ஆங்கரை கடத்தி டார்ச்சர் - பெண் தொழிலதிபர் கைது! | Woman Abducts Tv Anchor In Hyderabad

இதனால் ஆத்திரமடைந்த திரிஷ்னா, தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு நபருக்கு பணம் கொடுத்து பிரணவ் சிஸ்ட்லாவை கடத்தி திரிஷ்னாவின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

அப்போது, தொடர்ந்து திரிஷ்னாவுடன் தான் தொடர்பில் இருப்பதாக பிரணவ் உறுதியளித்து விட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷ்னா மற்றும் கடத்தல்காரர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.