நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பி சென்ற தொழிலதிபர் - இறுதியில் நேர்ந்த சோகம்!

India Telangana Crime Death
By Jiyath Feb 12, 2024 11:00 AM GMT
Report

தொழிலதிபர் ஒருவர் 8 பேர் கொண்ட கும்பலால் கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொழிலதிபர் மரணம்

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரின் குகத்பள்ளி பகுதியில் வசித்து வந்த தொழிலதிபர் பி. ராமு (36). இவர் சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பாஜகவில் இணைந்துள்ளார்.

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பி சென்ற தொழிலதிபர் - இறுதியில் நேர்ந்த சோகம்! | Businessman Brutally Murdered In Telangana

ராமு குகத்பள்ளியில் வசிப்பதற்கு முன்பு யூசுப்குடா பகுதியில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூசுப்குடா பகுதிக்கு சென்ற அவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெண் ஒருவர் அழைத்ததன் பேரில் யூசுப்குடா பகுதிக்கு ராமு சென்றது தெரிய வந்தது.

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

போலீசார் விசாரணை 

இதனையடுத்து அந்த பெண்ணை பிடித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த பெண் அழைத்ததின் பேரில் அவரின் வீட்டுக்கு சென்ற ராமுவை 8 பேர் கொண்ட கும்பல் கொடூர முறையில் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளார்.

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பி சென்ற தொழிலதிபர் - இறுதியில் நேர்ந்த சோகம்! | Businessman Brutally Murdered In Telangana

இதில் அவர் பலத்த காயமடைந்து பின்னர் உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் மணிகண்டன் என்பவருக்கு எதிராக கொலை முயற்சி புகார் ஒன்றை ராமு போலீசில் அளித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தில் அவரையும் போலீசார் தேடிவந்த நிலையில், மணிகண்டன் உள்பட 8 பேர் சரண் அடைந்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.