15 வயது சிறுமியுடன் லாட்ஜுக்கு சென்ற 2 இளைஞர்கள்.. விடிந்தும் விடாமல் வன்கொடுமை - கொடூரச் செயல்!

Sexual harassment Telangana Crime
By Vinothini Nov 20, 2023 07:15 AM GMT
Report

இளைஞர்கள் 15 வயது சிறுமியை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாட்ஜ்

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் கோல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த 23 வயதான அப்துல் நதீம் (எலக்ட்ரீசியன்), மற்றும் அவரது நண்பர் 20 வயதான பைக் மெக்கானிக் நஜ்ருதீன் ஆகிய இருவரும் அந்த சிறுமியை கடத்தி நார்சிங்கியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றனர்.

sexual harassment

அப்பொழுது லாட்ஜ் மேலாளர் அறை தர முடியாது என கூறினார். இதனைக் கண்ட லாட்ஜ் உரிமையாளர் விஜய் பணத்திற்காக ஆசைப்பட்டு அறை ஒதுக்க வேண்டும் என மேலாளருக்கு உத்தரவிட்டார். பின்னர், அந்த இரண்டு இளைஞர்களும் சிறுமியை விடிய விடிய சீரழித்துள்ளனர்.

ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் ஆபாசம் காட்டி அத்துமீறிய காவலர் - அதிர்ச்சி!

ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் ஆபாசம் காட்டி அத்துமீறிய காவலர் - அதிர்ச்சி!

சிறுமி கதறல்

இந்நிலையில், சிறுமி இரவு முழுவதும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த சமயத்தில் அப்துல் நதீம் நேற்று காலை சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இதனைக் கண்ட அவரது தந்தை மகளிடம் விசாரித்தார், அப்பொழுது அந்த சிறுமி அவருக்கு நடந்த கொடுமைகளை தந்தையிடம் கூறியுள்ளார்.

arrest

பிறகு, இது குறித்து அவர் கோல்கொண்டா போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் நதீம், மற்றும் நஜ்ருதீன் ஆகியோரை கைது செய்தனர், பின்னர் அவர்களுக்கு அறை வழங்கிய லாட்ஜ் உரிமையாளர் விஜய் மற்றும் மேலாளர் ஜான்சிங் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.