15 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் போக்ஸோவில் கைது !

Sexual harassment POCSO
By Jiyath Jul 05, 2023 11:25 AM GMT
Report

15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செயதுள்ளனர்.

விசாரணை 

திருவள்ளூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது அரசு பள்ளி மாணவியை காவிரி ராஜபுரத்தை சேர்ந்த யுகேந்திரன் என்ற இளைஞர் காதலித்தது வந்துள்ளார்.  பின்னர் சிறுமியை யுகேந்திரன் வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

15 வயது மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் போக்ஸோவில் கைது ! | Sexual Harassment Student Tvl

சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரில் கனகம்மா சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்தபோது இருவரும் வெளியூரில் இருப்பது தெரிய வந்துள்ளது.

போக்ஸோவில் கைது

இந்நிலையில் சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர் . இதில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து யுகேந்திரன் என்ற இளைஞரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.