தியான அறையில் பாலியல் உறவு - ரசிகர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை!
தியான அறையை உடலுறவுக்கு பயன்படுத்தக்கூடாது என விம்பிள்டன் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தியான அறை
விம்பிள்டன் டென்னிஸ் பல மைதானங்களில் நடைபெறும். அதன் அருகே ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய அறைகள் உள்ளன. அதில், இறை வணக்கம், தியானம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ரசிகர்கள் தங்கி கொள்ளலாம்.
இந்நிலையில், கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண வந்த ஜோடி ஒன்று 12-வது கோர்ட் அருகே உள்ள தியான அறைக்கு சென்று உடலுறவு கொண்டதாக கூறப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து, நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இதுபோன்று எதுவும் நடந்து விட கூடாது என்பதற்காக விம்பிள்டன் போட்டி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, இங்கிலாந்து புல்வெளி டென்னிஸ் கிளப்பின் தலைமை செயல் அதிகாரி சல்லி போல்டன் பேசுகையில், அறையை மக்கள் சரியான வழியில் பயன்படுத்துகின்றனர் என உறுதி செய்யப்படும்.
அமைதி அறை என்றால் அதில் பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். ஜோடிகள் நெருக்கத்துடன் இருக்க பயன்படுத்த கூடாது எனத் தெரிவித்துள்ளார்.