3-வது முறையாக பிரதமரானால்...இந்தியாவை முதல் நாடாக மாற்றுவேன்!! பிரதமர் மோடி!!
மத்திய பிரதேச மாநில பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மீண்டும் பிரதமரானால் நாட்டை பொருளாதாரத்தில் முதல் இடத்திற்கு கொண்டு செல்வேன் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உரை
வரும் 17-ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் நாட்டின் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இதில் ஒரு பகுதியாக தாமோ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர்கள் ஊழல் செய்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின், காங்கிரசாரின் ஊழலை தடுத்து நிறுத்தினோம் என குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை பாஜக அரசு நீட்டித்து என்பதை அறிந்துள்ளது காங்கிரஸ் அதன் காரணமாக தான், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளது என சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
3-வது முறையாக பிரதமரானால்
தொடர்ந்து பேசிய அவர், மக்களின் ஆசியுடன் ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்து, நாட்டின் பொக்கிஷங்களைச் சூறையாடமல் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதுதான் தங்களின் உத்தரவாதம் என மக்களிடம் சூளுரைத்தார்.
மேலும், தங்கள் உத்தரவாதம் நாட்டு மக்களை அதிக திறன் கொண்டவர்களாக மாற்றுவது தான் என்ற பிரதமர் மோடி, தான் மூன்றாவது முறையாக பிரதமரானால் இந்தியாவின் பொருளாதாரத்தை உலக அளவில் முதலாவது இடத்திற்கு கொண்டு செல்வேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.