நான் வந்து நிப்பேன்..கோவையில் போட்டியா?...கமல் சூசகம்
மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை - மருந்து போட்டுட்டு வந்து இதே கோவையில் நிற்பேன் என இன்று தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்த கமல் கூறியிருப்பது வைரலாகி வருகின்றது.
மக்கள் நீதி மய்யம்
நடிகர் கமல் தனியாக மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் அவர் கட்சி சார்பில் நிறுத்தப்படுவர்கள் தோற்றே போனாலும், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளிலேயே தோல்வியுற்றார்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார் கமல். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை - மருந்து போட்டுட்டு வந்து இதே கோவையில் நிற்பேன் என கூறினார்.
40 தொகுதிகளிலும் தயாராகுங்கள்
இதன் காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமல் நேரடியாக கோவை தொகுதியில் இருந்து போட்டியிட போவதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளாரா என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் 40 தொகுதிகளிலும் தொண்டர்கள் போட்டியிட தயராக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலோசனைக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.இந்தியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறும் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 40 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகும் படி கமல் கூறியிருக்கும் காரணத்தால், மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.