கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர்..தோனியை மன்னிக்கவே மாட்டேன் - யுவராஜ் சிங் தந்தை!
எம்.எஸ் தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன் என யுவராஜ் சிங் தந்தை பேசியுள்ளார்.
தோனியை...
இந்திய அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தவர் யுவராஜ் சிங். அதுமட்டுமின்றி இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங்.
இந்த நிலையில், இவரது தந்தை யோக்ராஜ் சிங். தொடர்ந்து எம்.எஸ்.தோனியை விமர்சித்து வருகிறார். அதாவது தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அவர் ஒருபோதும் எம்.எஸ்.தோனியை மன்னிக்கமாட்டேன் என பேசியுள்ளார்.
இது தொடர்பாக யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் பேசியதாவது, நான் எம்.எஸ். டோனியை மன்னிக்க மாட்டேன். கண்ணாடியில் அவரது முகத்தை அவர் பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்.
யுவராஜ் சிங் தந்தை
ஆனால், அவர் எனது மகனுக்கு (யுவராஜ் சிங்) எதிரான என்ன செய்தார்?என்பதெல்லாம் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. இதை எனது வாழ்நாள் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் எனது வாழ்வில் இரணடு விசயங்களை செய்தது கிடையாது.
முதல் விசயம், எனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மன்னித்தது கிடையாது. 2-வது, எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரி, ஒருபோதும் என வாழ்வில் கட்டிப்பிடிக்கமாட்டேன்.
என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே தோல்விக்கு தோனியின் மோசமான செயல்கள்தான் காரணம். யுவராஜ் சிங் மீது அவர் பொறாமைப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.