மலேசியாவில் பள்ளிக்குள் திடீரென நுழைந்த யானை

school malaysia elephant
By Jon Jan 25, 2021 01:04 PM GMT
Report

  மலேசியாவில் பெண் யானை திடீரென நுழைந்ததால் ஒட்டுமொத்த பள்ளியும் பயத்தில் உறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலேசியாவில் உள்ள ஒரு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தது பெண் யானை ஒன்று.

30இலிருந்து 35 வயதுக்கு உட்பட்டது என நம்பப்படும் அந்த யானை ஆர்.பி.எஸ் கெமர் தேசிய பள்ளி பள்ளியின் மின்சார வேலியைச் சேதப்படுத்திப் பள்ளிக்குள் நுழைந்தது.

அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று பேராக் மாநில வனவிலங்கு, தேசியப் பூங்காப் பிரிவின் இயக்குநர் யூசோஃப் ஷரீஃப் தெரிவித்தார். “எங்கள் பிரிவின் ஊழியர்கள் பள்ளியின் வேலியைப் பழுதுபார்த்துவிட்டனர்.

அதில் உள்ள மின்சாரச் சக்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. நீல LED விளக்குகளும் யானைகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்” என அவர் செய்தி நிறுவனத்திடம் தகவல் அளித்தார்.