மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி - காத்திருந்த அதிர்ச்சி!

Sexual harassment Uttar Pradesh India Crime
By Jiyath Apr 28, 2024 09:23 AM GMT
Report

இளம்பெண் ஒருவரை கணவரின் சகோதரர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பாலியல் வன்கொடுமை

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். கடந்த 2-ம் தேதி கணவர் வெளியே சென்றபோது அவரது சகோதரர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி - காத்திருந்த அதிர்ச்சி! | Wife Told Husband About Her Brother In Laws Rape

இதனை அவர் செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய கணவரிடம், நடந்த சம்பவங்களை அந்த பெண் கூறியுள்ளார். அப்போது கணவர் "இனி நீ எனது மனைவியே இல்லை.. நீ என்னுடைய மைத்துனி" என பெண்ணிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதயம் கொடுத்த இந்தியா - சென்னையில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்!

இதயம் கொடுத்த இந்தியா - சென்னையில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்!

வழக்குப் பதிவு

அடுத்த நாள் கணவரும் அவரது சகோதரரும் அந்த பெண்ணின் அறைக்கு ஒன்றாக வந்துள்ளனர். பின்னர் கணவர் துப்பட்டாவை எடுத்து அந்த பெண்ணை முயன்றுள்ளார். இதனை கணவரின் தம்பி செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவந்த அந்த பெண், சமூக ஊடகம் வழியே புகார் தெரிவித்துள்ளார்.

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி - காத்திருந்த அதிர்ச்சி! | Wife Told Husband About Her Brother In Laws Rape

அத்துடன் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இதனை கவனத்தில் கொண்ட போலீசார், பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.