3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை - குற்றவாளி அதிரடி கைது!

Tamil nadu Chennai Sexual harassment Crime
By Jiyath Feb 03, 2024 03:28 AM GMT
Report

3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஒருவர், நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை - குற்றவாளி அதிரடி கைது! | Criminal Arrested For Raping School Girls Chennai

அதில். தனது மகள் உள்பட 7 முதல் 10 வயதுடைய 3 சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமிகளுக்கு சாக்லேட் தருவதாக கூறி ஆளில்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் சொல்ல கூடாது என்றும் அந்த சிறுமிகளை மிரட்டியுள்ளார்.

குற்றவாளி கைது 

அந்த புகாரின் பேரில் போக்சோ உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்தனர்.

3 சிறுமிகளை சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை - குற்றவாளி அதிரடி கைது! | Criminal Arrested For Raping School Girls Chennai

இந்நிலையில், அந்த நபர் திருவான்மியூர் அருகே திரிந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து குற்றவாளியை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் அடையாறு மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த யோவான்(30) என்றும் தாய், தந்தையை இழந்து தனிமையில் கூலி வேலை செய்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து யோவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.