காதலருடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் - 9 வயது மகன் பகீர் வாக்குமூலம்
காதலருடன் சேர்ந்து, பெண் கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ராஜஸ்தான், கெர்லி பகுதியைச் சேர்ந்தவர் மான் சிங். இவர், தனது மகன் மற்றும் மனைவி அனிதாவுடன் வசித்து வந்துள்ளார். இதில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மான் சிங் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால், அவரின் உடலில் காயம் இருந்ததுடன், பல்லும் உடைந்திருந்தது. இதுதொடர்பாக மான் சிங் சகோதரர் கப்பார் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் உடற்கூராய்வு முடிவில், மான் சிங் அடித்து, மூச்சுத்திணற வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரின் 9 வயது மகன் அளித்த வாக்குமூலத்தில், இரவில் தனது தந்தை மான் சிங் தூங்கியதும், தான் அரைதூக்கத்தில் இருந்தேன். அப்போது, திடீரென தனது அம்மா அனிதா கதவை திறந்ததும், காசி அங்கிள் மற்றும் மேலும் நான்கு பேர் தங்களது பெட் ரூமுக்குள் வந்தனர்.
மனைவி வெறிச்செயல்
அவர்களை கண்டதும் அச்சத்தில் தூங்குவது போன்று நடித்தேன். உடனே, தனது தந்தை அருகே சென்றதும், காசி அங்கிள் தன்னை தூக்கி மிரட்டினார். தனது தந்தையை காசி அங்கிள் தலையணையால் அமுக்கி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்தார். தனது அம்மாவின் கண் முன்னே, தந்தையை காலை பிடித்துக் கொண்டு அந்த கும்பல் தாக்கியது எனத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், அனிதா கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த காசிராம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த உறவுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், காதலருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, இருவரும் சேர்ந்து 2 லட்சம் ரூபாய் கொடுத்து, கூலிப்படையினர் 4 பேரை தயார் செய்துள்ளனர்.
பின் 4 பேருடன் வந்த காசிராம், அனிதாவின் உதவியுடன் மான்சிங்கை கொலை செய்தது உறுதியானது. தற்போது, காசிராம், கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேரை கைது செய்த போலீஸார், மேலும் மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.