தூக்கில் தொங்கிய காதலி; சடலத்தை திருமணம் செய்த இளைஞன் - மனதை உருக்கிய சம்பவம்
இறந்த காதலியை இளைஞர் திருமணம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலி தற்கொலை
உத்தரப்பிரதேசம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சன்னி. இவர் அங்கு செல்போன் பழுதுபார்க்கும் கடை மற்றும் ஆபரண கடையும் வைத்துள்ளார். அதேப்பகுதியைச் சேர்ந்த பிரியங்கா மாதேரியா (23) என்ற இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக காதலித்த இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர். இதற்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதமும் தெரிவித்து, நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில், திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சன்னி பிரியங்காவை கடுமையாக திட்டியுள்ளார்.
இளைஞரின் செயல்
அதனால் அழுதுக்கொண்டே வீடு திரும்பிய பிரியங்கா, மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியிருந்தது தெரியவந்தது.
பின், அவருடைய வீட்டில் பிரியங்காவை சவப்பெட்டியில் வைத்திருந்தனர். அப்போது சன்னி பிரியங்காவின் நெற்றியில் குங்குமமிட்டு மாலை போட்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சவப்பெட்டியை 7 முறை வலம் வந்து இறுதிச் சடங்குகளை செய்தார். அதன்பின் பிரியங்காவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியினரின் மனதை உருக்கியுள்ளது.