தகாத உறவில் உல்லாசம்; தடையாக இருந்த கணவன் - ஸ்கெட்ச் போட்ட மனைவி!

Attempted Murder Chennai Crime
By Sumathi Jan 04, 2024 07:10 AM GMT
Report

தகாத உறவால், மனைவி தனது கணவனை கொலை செய்துள்ளார்.

தகாத உறவு

சென்னை, அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (38). அவரது மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

பிரேம்குமார் மனைவி

இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில், பிரேம்குமார் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் உடனே தப்பிச் சென்றார்.

கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

கணவனை தோளில் சுமந்து ஊர் முழுக்க வலம்.. தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

கணவன் கொலை

தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியது அயனாவரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவருக்கும் புரேம்குமார் மனைவிக்கும் தகாத உறவு இருந்துள்ளது.

தகாத உறவில் உல்லாசம்; தடையாக இருந்த கணவன் - ஸ்கெட்ச் போட்ட மனைவி! | Wife Killed Husband With Her Boyfriend Chennai

எனவே, அதற்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்து விட்டு, விபத்து என நாடகமாடியுள்ளனர். ஹரிகிருஷ்ணனின் நண்பர் சரத்குமார் என்பவருடன் சேர்ந்து பிரேம்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, அங்கு இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த ஹரிகிருஷ்ணனுடன் தப்பிச் சென்றுள்ளார்.

அதனையடுத்து, தலைமறைவாக உள்ள சன்பிரியா மற்றும் சரத்குமார் ஆகிய இருவரையும் தனிப்படை அமைத்து போலீ ஸார் தேடி வருகின்றனர்.