தகாத உறவால் எல்லை மீறிய காதலன் - சிசிடிவியால் சிக்கிய சூப் கடைக்காரர்!

Coimbatore Attempted Murder Crime
By Sumathi Aug 06, 2023 04:20 AM GMT
Report

திருமணம் மீறிய உறவில் ஏற்பட்ட பிரச்னையில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவு

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு 1 மகள் உள்ளார். அவரை தாய் எப்போதும் பள்ளிக்கு சென்று அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று ஜெகதீஸ்வரி பள்ளிக்கு வராததால், மகளே வீட்டுக்குச் சென்றுள்ளார்.

தகாத உறவால் எல்லை மீறிய காதலன் - சிசிடிவியால் சிக்கிய சூப் கடைக்காரர்! | Soup Shop Owner In A Coimbatore Woman Murder Case

அப்போது வீட்டில் தாய் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சூப் வியாபாரி மோகன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் கொலை

அப்போது தான், மோகன்ராஜ், ஜெதீஸ்வரிக்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. அதனையடுத்து ஜெகதீஸ்வரி இவருடன் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, வேறு சிலருடன் பேசியதாக சந்தேகமடைந்துள்ளார்.

தகாத உறவால் எல்லை மீறிய காதலன் - சிசிடிவியால் சிக்கிய சூப் கடைக்காரர்! | Soup Shop Owner In A Coimbatore Woman Murder Case

எனவே அவர் வீட்டிற்கு சென்று அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலைசெய்துள்ளார். ஸ்கூட்டி வாகனத்தை எடுத்துக்கொண்டு அவினாசி சாலைக்குச் சென்றவர், ஒரு ஸ்டிக்கர் கடையில் போலி வாகனப் பதிவு எண்ணை ஒட்டியிருக்கிறார்.

மற்றொரு கடையில் கிளவுஸ் வாங்கியிருக்கிறார். நகையைக் கொள்ளையடிப்பது போன்ற செயல்களைச் செய்துள்ளது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. முன்னதாக சேலத்தில் இவர்மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.