திருமணம் மீறிய உறவு.. தாயின் அலட்சியம் - ஒன்றரை வயது குழந்தை பலி!

Tamil nadu Attempted Murder Crime Death
By Sumathi Dec 03, 2022 06:54 AM GMT
Report

தாயின் அலட்சியத்தால் குழந்தை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத உறவு

திண்டுக்கல், சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி துர்கா தேவி(21). இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக 9 மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.

திருமணம் மீறிய உறவு.. தாயின் அலட்சியம் - ஒன்றரை வயது குழந்தை பலி! | Child Death Police Arrested Mother In Dindigul

எனவே துர்காதேவி தன்னுடைய குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், துர்கா தேவிக்கும் எரியோடு பகுதியைச் சேர்ந்த அஜய்(21) என்கிற இளைஞருக்கும் தகாத உறவு இருந்து வந்திருக்கிறது. இதில் சம்பவத்தன்று, அஜய்யை வரவழைத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

குழந்தை பலி

அப்போது குழந்தை தொட்டிலிலிருந்து இறங்கி தாயைத் தேடி அருகே இருந்த கிணற்றில் விழுந்திருக்கிறது. அன்றைய இரவே துர்காதேவி குழந்தையை தேடியிருக்கிறார். காலையில்தான் காணாமல்போன குழந்தை கிணற்றில் பிணமாக மிதப்பது தெரியவந்தது.

அதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தாய் துர்காதேவி, காதலன் அஜய் இருவரையும் கைது செய்துள்ளனர்.