தகாத உறவு... கள்ளக் காதலனுடன் ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி!

Tamil nadu Attempted Murder
By Sumathi Jul 07, 2022 12:33 PM GMT
Report

தகாத உறவால் கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கள்ளக்காதல்

திண்டுக்கல், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 26. இவரது மனைவி காயத்ரி தேவி வயது 25.

karur

இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், காயத்ரி தேவி அவ்வப்போது கரூர், மன்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

தகராறு

அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(29) என்பவருக்கும் காயத்ரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

murder

இதை அறிந்து மணிகண்டன், மனைவி காயத்ரியை கண்டித்துள்ளார். இது குறித்து காயத்ரி தேவி கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

தாக்குதல்

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கமலக்கண்ணன் மணிகண்டனை மது அருந்துவதற்காக கரூர் மணல்மேடு பகுதிக்கு கமலக்கண்ணன் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களைக் கொண்டு மணிகண்டனை தாக்கி கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

 அடித்து கொலை

படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மணிகண்டன் உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க,

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மணிகண்டனின், மனைவி காயத்ரி தேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

மனைவி உடந்தை

மேலும், இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார்.

 ஆயுள் தண்டனை

அப்பொழுது அவர் கூறுகையில் மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரி தேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும்,

மேலும், இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தும், அவதாரத்தை கட்ட தவறினால் மேலும், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பை அளித்தார்.    

சரியாக படிக்கவில்லை.. 4 வயது குழந்தையை அடித்தே கொன்ற கொடூர பெற்றோர்!