தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு.. ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்!

Uttar Pradesh India Crime
By Jiyath May 07, 2024 10:56 AM GMT
Report

கணவரை கட்டிவைத்து சித்திரவதை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

கொடூர மனைவி 

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் மனன் ஜைதி - மெஹர் ஜஹான். இந்நிலையில் மெஹர் ஜஹானுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு.. ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்! | Wife Cigarette Burns Husband Shocking Video

இதனை அறிந்த மனன் ஜைதி தனது மனைவியிடம் அந்த உறவை கைவிடுமாறு கண்டித்துள்ளார். ஆனாலும் மெஹர் ஜஹான் தொடர்ந்து அந்த நபருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார்.

மேலும் கணவன் மனன் ஜைதியை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வாய் பேச முடியாத குழந்தை; முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்- என்ன நடந்தது?

வாய் பேச முடியாத குழந்தை; முதலைக்கு இரையாக்கிய கொடூர தாய்- என்ன நடந்தது?

அதிரடி கைது 

இதனால் மனன் ஜைதி தனது மனைவிக்கு தெரியாமல் வீட்டின் அறையில் கேமராவை பொருத்தியுள்ளார். சம்பவத்தன்று மெஹர் ஜஹான், போதை கலந்த பாலை தனது கணவருக்கு கொடுத்த மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு.. ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்! | Wife Cigarette Burns Husband Shocking Video

பின்னர் கணவரின் காய் கால்களை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், சிகிரெட்டால் அவரது உடம்பையும், பிறப்புறுப்பையும் சூடு வைத்துள்ளார். மேலும் கத்தியை கொண்டும் கணவரின் பிறப்புறுப்பை காயப்படுத்தியுள்ளார். இதில் வலி தாங்கமுடியாமல் கணவன் துடிதுடித்தார்.

இதுதொடர்பான வீடியோ காட்சியை ஆதாரமாக கொண்டு மனன் ஜைதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் மெஹர் ஜஹான் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.