கள்ளக்காதலனுடன் வசமாக சிக்கிய மனைவி, திருமணம் செய்து வைத்த கணவர் - கடைசியில் ட்விஸ்ட்!

India Bihar
By Vinothini Jul 08, 2023 07:57 AM GMT
Report

பீகாரில் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சிக்கியதும் அவரது கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல்

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதில் கணவர் இரவு நேர வேலைக்குச் செல்லும்போது, அவருடைய மனைவி தன்னுடைய காதலனைக் காணச் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.

wife-caught-with-lover-her-husband-made-them-marry

இதுபோல் ஒருநாள் இவரது கணவர் வெளியூர் சென்றபொழுது, தனது கள்ளக்காதலனுடன் இருந்துள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் அவரை தாக்கியுள்ளனர், பின்னர் ஊரை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.

திருமணம்

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கணவர் என்ன நடந்துன்ஹது என்று நிதானமாக கேட்டு அறிந்தார். பின்னர் அவர்கள் இருவருக்கும் சிவன் கோவிலின் முன் திருமணம் செய்து வைத்தார்.

wife-caught-with-lover-her-husband-made-them-marry

இதில் காயங்களுடன் இருந்த அந்த காதலன் பெண்ணிற்கு குங்குமம் வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது, அதேபோல் அந்த ஆணிற்கு திருமணமாகி 3 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.