கருப்பா இருந்தா கள்ள உறவா? மிஞ்சிய மனைவி - கொதித்த நீதிமன்றம் அதிரடி!

Karnataka Divorce
By Sumathi Aug 09, 2023 03:53 AM GMT
Report

கணவனின் கருப்பு நிறத்தை சுட்டிக்காட்டி, மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

 வெறுத்த மனைவி  

கர்நாடகா, 2007-ல் திருமணமான தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். 44 வயதான அந்த நபர், மனைவியிடமிருந்து 2012ல் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

கருப்பா இருந்தா கள்ள உறவா? மிஞ்சிய மனைவி - கொதித்த நீதிமன்றம் அதிரடி! | Wife Calling Husband Dark Skinned Court Divorce

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2017ம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கில் அவரது 41 வயதுடைய மனைவி "என்னுடைய கணவர் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார், அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மட்டுமல்லாது அவரும் அவருடைய குடும்பத்தினரும் என்னை மோசமாக நடத்துகின்றனர்.

விவாகரத்து

வரதட்சணை கேட்டு தொல்லை செய்கின்றனர். என்னுடைய குழந்தையுடன் எங்கும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது" என்றுக் குறிப்பிட்டு விவாகரத்து கோரியுள்ளார். இந்நிலையில், இதனை மறுத்த கணவன், "நான் கருப்பாக இருக்கிறேன் என்பதால் மனைவி என்னை வெறுக்கிறார், அவமானப்படுத்தினார்.

கருப்பா இருந்தா கள்ள உறவா? மிஞ்சிய மனைவி - கொதித்த நீதிமன்றம் அதிரடி! | Wife Calling Husband Dark Skinned Court Divorce

எங்களுக்கு பிறக்கும் குழந்தை குறித்த அச்சமும் அவருக்கு இருந்தது. எனவேதான் அவர் அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், கணவனின் நிறத்தை முன்வைத்து மனைவி வெறுத்து வந்ததும் உறுதியானது.

கருப்பாக இருக்கும் கணவர் மனைவியால் அவமானப்படுத்தப்படுவது கொடுமையானதாகும். இதுவே அவர் குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காமல் மேல் முறையீடு செய்ய வலுவான காரணமாகும். எனவே நாங்கள் அவருக்கு விவாகரத்து வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.