மொபைல் போனை பிடுங்கிய கணவன் - ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யை அங்கேயே ஊற்றிய மனைவி!

Crime Madhya Pradesh
By Vinothini Jun 17, 2023 06:09 AM GMT
Report

கனவன் தனது மொபைல் போனை பிடுங்கியதால் ஆத்திரத்தில் மனைவி கொதிக்கும் எண்ணெய்யை மேலே ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளத்தொடர்பு

மத்திய பிரதேசம், குவாலியர் கம்பம் பகுதியில் மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவரது மனைவி பாவனா, வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

wife-assaults-husband-using-boiling-oil

சில நாட்களுக்கு முன்பு இவரது கணவர் வீட்டிற்கு வந்தபோது, பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர் தனது கணவருடன் இவரது மனைவி அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பதாக புகாரளிதார். இது குறித்து கணவன் இவரிடம் விசாரித்தபோது, இல்லை என்று மழுப்பியுள்ளார்.

அப்போது அவர் நீண்ட நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கண்டித்து அவரது மொபைல் போனை வாங்கி வைத்துக்கொண்டார்.

மனைவி செய்த காரியம்

இந்நிலையில், கணவன் தனது மொபைல் போனை வாங்கியதால் ஆத்திரமடைந்த மனைவி இரவு 2 மணியளவில் கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து உள்ளார். இதை எதிர்பார்த்து காத்திருந்த இவரது மனைவி எழுந்து கிச்சனுக்கு சென்று சமையல் எண்ணெய்யை சூடாக்கினார்.

wife-assaults-husband-using-boiling-oil

பின்னர் அதனை கொண்டு வந்து கணவனின் அந்தரங்க பகுதியில் ஊற்றினார். இதில் அந்த பகுதி 70 சதவீதம் எரிந்துள்ளது, இதன்பின் மனைவி வீட்டை விட்டு ஓடிவிட்டார். மேலும், அங்கு அக்கம் பக்கத்தினர் பார்த்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து, இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது மனைவியை தேடிவருகின்றனர்.