இயற்கைக்கு மாறான பாலியல் உறவு; மனைவி பகீர் புகார் - விசாரணையில் ட்விஸ்ட்!

Uttar Pradesh Relationship Crime
By Sumathi Oct 14, 2024 06:32 AM GMT
Report

பாலியல் உறவு தொடர்பாக கணவன் மீது மனைவி புகாரளித்துள்ளார்.

மனைவி புகார்

உத்தரபிரதேசம், நொய்டாவில் வசித்துவருபவர் பிரஞ்சல் சுக்லா. இவருக்கு 2015ல் மீஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

இயற்கைக்கு மாறான பாலியல் உறவு; மனைவி பகீர் புகார் - விசாரணையில் ட்விஸ்ட்! | Wife Alleged Husband Physical Relationship

இந்நிலையில், திடீரென மீஷா தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களான மது ஷர்மா, புன்யா ஷீலா ஷர்மா ஆகியோர் மீது வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் மீதான விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. புகாரில் மீஷா கூறியிருப்பதாவது,

பிரஞ்சல் சுக்லா என்னை ஆபாச படங்களை பார்க்கவும், இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவில் ஈடுபடவும் வலியுறுத்தி கொடுமைப்படுத்துகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விசாரணையில் மீஷா, பிரஞ்சல் சுக்லாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ மீஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யவில்லை.

தினமும் பாலியல் உறவு; அந்த 2 பிரச்சனை இருக்கு - டாக்டர்ஸ் எச்சரிக்கை!

தினமும் பாலியல் உறவு; அந்த 2 பிரச்சனை இருக்கு - டாக்டர்ஸ் எச்சரிக்கை!

நீதிமன்ற தீர்ப்பு

கணவன் - மனைவிக்கு இடையேயான இல்லற உறவில் ஏற்பட்ட சிக்கலே இந்தப் புகாருக்கான அடிப்படை காரணம் என தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிஷ் குமார் குப்தா, “இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையேயான தகராறு பாலியல் இணக்கமின்மை தொடர்பான சர்ச்சை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

allahabad high court

மேலும், இந்தத் தகராறு காரணமாக மனைவியால் தவறான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து உடனடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒழுக்கமான நாகரிக சமூகத்தில் ஒருவர் தனது சொந்த மனைவியை அல்லது கணவரை தவிர இல்லற இன்பத்துக்கு வேறு எங்கு செல்ல முடியும்” என்று கூறி வரதட்சணை புகாரை தள்ளுபடி செய்துள்ளார்.