இதனால் தான் நடராஜனுக்கு வாய்ப்பில்லை? பிசிசிஐ முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி
அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜன் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
உலகக்கோப்பைக்கான இந்திய அணி சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை சேர்ந்த வீரரான நடராஜனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படும் என ரசிகர்கள் பெரிதும் காத்திருந்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் நடராஜன், இது வரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி purple cap பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். அவருக்கும் முதல் இடத்தில் இருக்கும் பும்ராவிற்கும் வித்தியாசம் வெறும் ஒரு விக்கெட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு ஒரு காரணமும் இருப்பதாக கருதப்படுகிறது. 13 விக்கெட் எடுத்தாலும், அவரின் economy 9.00 ஆகும். இது ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதே போல, அமெரிக்காவில் மைதானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்பது கணிக்கமுடியாது நிலையில், அணியில் அனுபவம் வாய்ந்த ஷமி, பும்ரா போன்றறை தேர்வு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.