தடம்பதித்த இந்தியா; இனி வெறும் 14 நாள் மட்டுமே ஆய்வு! எதற்காக, என்ன காரணம் தெரியுமா?
ரோவர் கருவிகள் நிலவின் தென் துருவத்தில் 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்ய இருக்கிறது.
சந்திரயான் 3
பூமியின் சுற்று வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்று வட்டப்பாதையை கடந்து 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஆகஸ்ட் 23ல் நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால் பதித்தது.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது.
14 நாட்கள் ஆய்வு
தற்போது நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டர் கலனில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்துள்ளது. இது 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும்.
இதனால், அங்கு ஒருநாள் என்பது பூமியின் 28 நாளுக்கு சமமாக பார்க்கப்படுகிறது. அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி கொண்டு லேண்டர் கருவி செயல்பட இருக்கிறது. அதன்பிறகு நிலவில் இரவு தொடங்கிவிடும். தொடர்ந்து 14 நாள் இருளாகவே இருக்கும் என்பதால் லேண்டர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது.
இதனால், லேண்டர் கருவி செயல் இழந்து விடும்.
இதனால்தான், மொத்த ஆய்வும் 14 நாட்களுக்குள் முடிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.