நினைவான 140 கோடி கனவுகள்...நிலவில் கால்பதித்த சந்திரயான்-3..!
இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் தற்போது சரியாக 6:04 மணிக்கு நிலவில் தரையிறக்கப்பட்டது.
சந்திரயான் 3 பயணம்
இந்தியாவில் இருந்து நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்படும் விண்கலங்கள் திட்டம் தான் சந்திரயான். இதன் 3வது பகுதியான சந்திரயான் 3வது இன்று நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கவுள்ளது. இந்த திட்டத்தின் விக்ரம் லேண்டர் தற்போது நிலவை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
திக்திக் 15 நிமிடங்கள்
நிலவில் தரையிறங்குவதை வெற்றிகரமாக செய்திட விஞ்ஞானிகள் தீவிரமான முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் அந்த 17 நிமிடங்கள் மிகவும் முக்கியமானதாகும். இது குறித்து இஸ்ரோவின் தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் நிலவின் வட்ட பாதையில் சரியாக வலம் வந்தது மிக முக்கிய தருணங்களில் ஒன்றாகும் என குறிப்பிட்டார்.
நிலவில் தரையிறங்கும் போது விண்கலத்தின் வேகத்தை குறைத்து, சரியாக வெறும் 1.68 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே தான் இயக்கவேண்டும் என்ற மிக பெரிய சவாலை விஞ்ஞானிகள் எதிர்கொண்ட போதிலும்,சரியான திட்டமிடுதலும் முயற்சிகளும் கைகொடுத்தது.
வெற்றிகரமாக தரையிறக்கம்
அதில், சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு நிலையில், திட்டமிடப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு பின்னர் நிலவில் வெற்றிகரமாக
6:04 மணிக்கு தரையிறக்கப்பட்டது.