கொரோனாவை விட மோசமான ஆபத்து; எச்சரிக்கும் WHO - பீதியில் மக்கள்!
கொரோனா வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெர்ஸ் கொரோனா
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கொரோனா தொற்று அறிகுறியுடன் நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மெர்ஸ் கொரோனா (MERS - CoV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த 108 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மெர்ஸ் கோவிட் வைரஸ் என்பது மரபணு சார்ந்த வைரஸாக கருதப்படுகிறது. ஒட்டகங்களில் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும். இதுவரை இது பாதிக்கப்பட்ட 2,605 பேரில் 936 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும்.
இதற்கு இன்னும் மருந்து கண்டுப்பிடிக்காததால் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தே உயிர் பிழைக்கும் வாய்ப்பி அமைவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.