ரஷ்யாவில் கிளர்ச்சி செய்த கூலிப்படையின் தலைவர் எங்கே? - புடின் நடத்தும் நாடகமா?
ரஷ்ய நாட்டிற்கு எதிராக தாக்குதல் நடத்திய கூலிப்படையின் தலைவர் எங்கே என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
எதிர்த்தாக்குதல்
கடந்த வருடத்திலிருந்து ரஷ்யா - உக்ரைனுக்கிடையே போர் நடந்து வந்தது. இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் எனும் கூலிப்படைக் குழு செயல்பட்டது. தற்போது திடீரென இந்த கூலிப்படை ரஷ்யா மீது எதிர்த்தாக்குதல் நடத்தியது.
பின்னர், வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தாக்குதலில் பின்வாங்கியது என்று கூறப்பட்டது. இதில் பின் வாங்குவது குறித்து அந்த கூலிப்படையின் தலைவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
யெவ்ஜெனி ப்ரிகோஜி எங்கே?
இந்நிலையில், அந்த தலைவர் பின்வாங்குவது குறித்து ஆடியோ வெளியிட்ட பின்னர் அவர் அண்டை நாடான பெலாரசுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு சென்றதை பிரிகோசினோ, பெலாரஸ் அதிகாரிகளோ உறுதிப்படுத்தவில்லை.
ஒரு சுயேச்சையான பெலாரஸ் ராணுவ கண்காணிப்பு அமைப்பான பெலாரஸ்கி ஹாஜுன், பிரிகோசினின் ஜெட் விமானம், பெலாரஸ் தலைநகரான மின்ஸ்க் அருகே நேற்று காலை வந்திறங்கியதாக தெரிவித்துள்ளது.
கூலிப்படையின் தலைவர் ஆடியோ வெளியிட்ட அன்று இரவு புடின் தொலைக்காட்சியில் ப்ரிகோஜியின் பெயரை குறிப்பிடாமல் அந்த படையினர் உக்ரைனின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறினார்.
மேலும், தனியார் படையின் கிளர்ச்சி குறித்த குற்றவியல் விசாரணையை ரத்து செய்வதாக ரஷிய அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். ஆனால் தற்போது வரை ப்ரிகோஜி எங்கு உள்ளார் என்பது குறித்தும் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இதனால் புடின் தான் நாடகம் ஆடுகிறாரோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.