என் தலைக்கு 10 கோடி'னா - சனாதனம் ஒழிச்சாச்சு'னு சொன்ன செல்லூர் ராஜு தலைக்கு எவ்வளவு? உதயநிதி கேள்வி
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சனாதனத்தை ஒழித்துவிட்டதாக கூறிய நிலையில், அதனை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சனாதன விவகாரம்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை தேசிய அரசிலிலும் ஏற்படுத்தி இருக்கின்றது.
தொடர்ந்து, இது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என குறிப்பிட்டு தமிழகத்தில் சனாதன பெரியார் அண்ணா காலத்திலேயே ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறினார்.
உதயநிதி கேள்வி
இந்நிலையில், இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதனத்தை தான் ஒழிக்கவேண்டும் என கூறியதற்கே இவ்வளவு பிரச்சனைகளும், தன் தலைக்கு 10 கோடி விலை வைக்கிறார்கள் என்றால் சனாதன ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறிய செல்லூர் ராஜுவின் தலைக்கு எவ்வளவு விலை வைக்கப்படும் என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
மேலும், தனக்கு வரலாறு தெரியாது சினிமாவில் இருந்து வந்ததாக செல்லூர் ராஜு விமர்சித்ததற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தான் சினிமாவில் இருந்து வந்து உண்மை தான் என குறிப்பிட்டு ஆனால், அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் சினிமாவில் இருந்து தான் வந்தார்கள் என்று நினைவூட்டி பேசினார்.