திடீரென ஏற்பட்ட மாற்றம்; எந்த வயதில் நீங்கள் தாத்தா, பாட்டி ஆகிறீர்கள்? ஆய்வல் தகவல்!
எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரை முதியவர் என்று அழைக்க முடியும் என்ற அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அறிவியல் ஆராய்ச்சி
ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகம், எந்த வயதில் முதுமை தொடங்குகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தியது. அதாவது, ஒருவரை எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் முதியவர் என்று அழைக்க முடியும் என்ற அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
வயதாவதற்கு பல அறிகுறிகள் உள்ளன. இது மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆய்விற்காக வெவ்வேறு காலகட்டங்களில் பிறந்த 14,056 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் திறன்களுக்கு மேலதிகமாக, மன அமைப்பு குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
முதுமையின் வயது
இங்குதான் விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்தனர். மருத்துவ அறிவியலின் முன்னேற்றம் காரணமாக கடந்த சில தசாப்தங்களில் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, அதேபோல் முதுமையின் வயதும் அதிகரித்துள்ளது.
67 வயதை முதுமையின் வயதாகக் கருதலாம் என்று தசாப்தங்களுக்கு முன்பு சில ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஆனால், தற்போது முதுமைக்கான சராசரி வயது 76.8 ஆண்டுகள். இந்த வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சராசரியாக இருக்கும். உடலை பொருட்படுத்தாமல், முதுமைக்கும் மனதிற்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ரணிலிடம் 800 மில்லியன் வாங்கிய சாணக்கியன் - என்ன நடந்தது: அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி. IBC Tamil
