போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்..வயநாடு விபத்து!! த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தல்

Vijay Tamil nadu Kerala Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jul 30, 2024 09:25 AM GMT
Report

கேரளா மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வயநாடு விபத்து

கேரளாவின் வயநாட்டில் பெறும் பாதிப்புகள் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வரும் சூழலில், இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

Wayanad landslide Accident

சுமார் 500 குடும்பங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், 70 பேரின் உடல்கள் தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் வயநாட்டிற்கு விரைந்துள்ளார்கள்.

Wayanad landslide Accident

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆங்கிலத்தில் இருக்கும் அவர் பதிவின் தமிழாக்கம் வருமாறு,

விஜய் பதிவு 

#வயநாடு, #கேரளாவில் நிலச்சரிவு சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன.

நமது சகோதர மாநிலத்திற்கு உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

நமது சகோதர மாநிலத்திற்கு உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.