மக்களுக்கு அதிர்ச்சி தகவல் - சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Chennai Water Cut
By Karthick Apr 26, 2024 04:20 AM GMT
Report

சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக, இன்று முதல் 2 நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகள்

சென்னையின் பல இடங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலைகள் இதன் காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. அதே போல, பல இடங்களில் சாலைகள் மூடப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

water-supply-will-be-stopped-for-2-days-in-chennai

ஆலந்தூர் முதல் பூந்தமல்லி வரையிலும், கோயம்பேடு முதல் மாத்தூர் - மணலி வரையிலும் மெட்ரோ பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் பல சாலைகள் பெரும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றது .

நெருங்கி வரும் தண்ணீர் தட்டுப்பாடு - தப்பிக்குமா சென்னை??

நெருங்கி வரும் தண்ணீர் தட்டுப்பாடு - தப்பிக்குமா சென்னை??

தற்போது மெட்ரோ பணி காரணமாக 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

water-supply-will-be-stopped-for-2-days-in-chennai

இந்த விநியோக நிறுத்தம் நேற்று(25-4-24) இரவு 9 மணி முதல் வரும் 27-ஆம் தேதி இரவு 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னை மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் மெட்ரோ பணிகளுக்காக பிரதான குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த நிறுத்தம் வந்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.