ஆபாச படம் பார்ப்பது தவறில்லை.. அவரவர் விருப்பம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Kerala India
By Vinothini Sep 13, 2023 06:24 AM GMT
Report

உயர்நீதிமன்றம் ஆபாச படம் பார்ப்பது குறித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு

கேரளாவில், கடந்த 2016-ம் ஆண்டு சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த 33 வயதான நபர் ஒருவர் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் அவரை குற்றம் செய்ததாக கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 292-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

watching-porns-alone-is-not-an-offence

இந்த வழக்கை நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கினார்.

நீதிபதி தீர்ப்பு

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அதனை விசாரித்த நீதிபதி, "தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை.

watching-porns-alone-is-not-an-offence

இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும். ஆபாச படங்கள் காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதனை குழந்தைகள் உட்பட அனைவராலும் இயக்க முடிகிறது" என்று தெரிவித்துள்ளார்.