யாருக்கும் காட்டாமல் ஆபாசப் படம் பார்ப்பது தப்பில்ல - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தனிப்பட்ட நேரத்தில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது குற்றமல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆபாச படங்கள்
கேரளா, ஆலுவா பேலஸ் பகுதியில் 33 வயது நபர் ஒருவர் 2016ல் சாலையோரம் தனியாக அமர்ந்து ஆபாச வீடியோக்களை தனது மொபைலில் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.குன்ஹி கிருஷ்ணன், ஒருவர் ஆபாச வீடியோவை தனிப்பட்ட முறையில் பார்த்துவிட்டு
நீதிமன்றம் தீர்ப்பு
அதை வேறு யாருக்கும் அனுப்பாமல் இருந்தால் அல்லது பொது இடத்தில் பார்க்காமல் இருந்தால், அது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படாது. இது அவரின் தனிப்பட்ட விருப்பம்.
யாருடைய தனியுரிமையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது. குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட், கால்பந்து அல்லது அவர்கள் விரும்பும் பிற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.
மைனர் குழந்தைகளிடம் மொபைல் போன்களை கொடுப்பதில் உள்ள ஆபத்துகளையும் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.