பெண் டாக்டரின் ஆபாச படங்கள் - பேஸ்புக் மீது குற்ற வழக்கு பதிவு - கேரள போலீசார் அதிரடி!

Facebook Kerala India Crime
By Jiyath Aug 22, 2023 06:45 AM GMT
Report

பேஸ்புக் நிறுவனம் மீது கேரள மாநில போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆபாச படங்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்னர் அந்த பக்கத்தில் டாக்டரின் ஆபாசமான படங்களை மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர்.

பெண் டாக்டரின் ஆபாச படங்கள் - பேஸ்புக் மீது குற்ற வழக்கு பதிவு - கேரள போலீசார் அதிரடி! | Kerala Police Files Criminal Case Against Facebook

இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் கேரள சைபர் கிரைம் போலீசார் பெண் டாக்டரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த ஆபாச படங்களை அழிக்க முயன்றுள்ளனர். ஆனாலும் ஹேக் செய்யப்பட்டிருந்ததால் அந்த படங்களை போலீசாரால் நீக்க முடியவில்லை.

போலீசார் வழக்கு

பதிவு இந்நிலையில் பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்த நபரை கண்டுபிடித்து, படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பேஸ்புக்கை நடத்தும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு கேரளா போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

பெண் டாக்டரின் ஆபாச படங்கள் - பேஸ்புக் மீது குற்ற வழக்கு பதிவு - கேரள போலீசார் அதிரடி! | Kerala Police Files Criminal Case Against Facebook

நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் படங்களை நீக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒருவாரமாகியும் பெண் டாக்டரின் ஆபாச படங்களை நீக்கவில்லை என்றும் அனுப்பிய நோட்டீஸுக்கு சரியான பதிலையும் பேஸ்புக் நிறுவனம் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் மீது போலீசார் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் பதிவு செய்த முதல் வழக்கு இதுவாகும்.