எனது அந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிக்கவே இல்லை - வாசிம் அக்ரம் கருத்து!

Cricket India Indian Cricket Team Yashasvi Jaiswal Sports
By Jiyath Feb 22, 2024 09:20 AM GMT
Report

தனது சதனையை ஜெய்ஸ்வால் சமன் தான் செய்துள்ளார் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 

ஜெய்ஸ்வால் சாதனை 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

எனது அந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிக்கவே இல்லை - வாசிம் அக்ரம் கருத்து! | Wasim Akram Reacts To Jaiswal World Record

மேலும், 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 போட்டிகளில் 545 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்து வருகிறார். முன்னதாக 3-வது போட்டியின் 2-வது இன்னிங்சில் 12 சிக்ஸர்கள் பறக்க விட்டார்.

6 பந்துகளில் 6 சிக்ஸர்; அதிரடி சாதனை படைத்த ஆந்திர வீரர் - வைரலாகும் Video!

6 பந்துகளில் 6 சிக்ஸர்; அதிரடி சாதனை படைத்த ஆந்திர வீரர் - வைரலாகும் Video!

வாசிம் அக்ரம் கருத்து 

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை அவர் முறியடித்தார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

எனது அந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிக்கவே இல்லை - வாசிம் அக்ரம் கருத்து! | Wasim Akram Reacts To Jaiswal World Record

இந்நிலையில் வாசிம் அக்ரம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஜெய்ஸ்வால் 12 சிக்ஸர்கள் அடித்துள்ளார், நானும் 12 சிக்ஸர்கள் அடித்துள்ளேன். எனவே, அவர் எனது சாதனையை சமன் தான் செய்துள்ளார். முறியடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.