என்ன சன்ரைசர்ஸ் பிளாக் செஞ்ச அப்போ - வருத்தப்படும் வார்னர்!!
2016-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக கோப்பையை வென்றார் டேவிட் வார்னர்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இந்திய ரசிகர்களிடம் நெருக்கமான நட்பை கொண்டுள்ளார். அதற்கு ஐபிஎல் தான் முதல் முழு காரணம்.
ஹைதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 2016'இல் அந்த அணிக்காக கோப்பையையும் வென்று கொடுத்தார். இன்ஸ்டகிராமில் தனது குடும்பத்துடன் தெலுங்கு பட பாடல்களுக்கு ரீலிஸ் செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள வார்னர், தற்போது டெல்லி அணியில் விளையாடுகிறார்.
டேவிட் வார்னரை ஹைதரபாத் அணி விடுவித்தது பெரும் அதிர்ச்சிக்குரிய விஷயமே. 2021-ஆம் ஆண்டில் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட டேவிட் வார்னரை சமூகவலைத்தளங்களிலும் சன்ரைசர்ஸ் பிளாக் செய்துள்ளது. இது குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக டேவிட் வார்னர் பேசியுள்ளார்.
நெகிழ்ச்சியாக
அஸ்வினின் யூ-டியூப் சேனலில் அவர் பேசும் போது, சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தால் பிளாக் செய்யப்பட்டது அதிகமாக காயப்படுத்தியது என கூறி, அது தன்னை விட ரசிகர்களை அதிகமாக காயப்படுத்தியதாக உணர்வதாக கூறினார்.
ஒருவர் வைத்திருக்கக்கூடிய மிக முக்கியமான உறவென்றால் அது ரசிகர்கள் தான் என தெரிவித்த வார்னர், ரசிகர்களுடன் தனக்கு இருந்த ஈடுபாடு மிகவும் நன்றாகவே சென்றதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். இந்த சீசனில் மோசமான ஃபார்ம் காரணமாக டெல்லி அணியில் தொடர் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார் டேவிட் வார்னர்.